நெல்லை: திருநெல்வேலியில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை மாநில பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ரூ.100 கோடியில் நவீன நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தையும், பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி பகுதியில் பொருநை அருங்காட்சியக கட்டுமானப் பணிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.