
1957 பிப்ரவரி 25 அன்று சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்தைத் தொடர்ந்து, மார்ச் 1-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் தமது கட்சி வேட்பாளரை ஆதரித்து பசும்பொன் தேவர் பேசியதாவது:
“சகோதரர்களே! தலைவர் அவர்களே! கூட்டத்திலே பேச ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு விபரீதச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதையும் நான் பயன்படுத்த வேண்டும். என்னை எதிர்த்து அரசியல் நடத்துகிறவன் தரம் என்ன என்பதைச் சொல்ல வேண்டி வந்து விட்டது. அது என் கடமையாகிறது.

