சிவகாசி அருகே சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று வெடித்து சிதறியதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதும், மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.
பட்டாசு ஆலைகளில் அடிக்கடி இதுபோன்ற வெடிவிபத்து சம்பவங்கள் நடந்ததால், அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களை மத்திய, மாநில அரசுகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் பரிந்துரைத்துள்ளன. இவை எல்லாவற்றையும் மீறி பட்டாசு ஆலைகளில் தீவிபத்து நடப்பதும், தொழிலாளர்கள் உயிரிழப்பதும் தொடர்கதையாக இருந்து வருவது அனைவரையும் ஏமாற்றமடையச் செய்கிறது. இதுபோன்ற விபத்து சம்பவங்கள் நடந்தவுடன் உயிரிழந்தோர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் நிவாரணம் அறிவிப்பதுடன் அரசு தன் கடமையை முடித்துக் கொள்வது நல்லதல்ல.