நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அமைந்துள்ள ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்துக்கு பிரதமர் மோடி நேற்று முதன்முறையாக சென்றார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாக்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மோடி பிரதமராக பதவியேற்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு நேற்று சென்றார். அப்போது, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிரதமரை அன்புடன் வரவேற்றார்.
பின்னர் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் ஸ்மிருதி மந்திரில் உள்ள அந்த அமைப்பின் நிறுவனர் ஹெட்கேவர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, இந்தியாவின் அழியாத கலாச்சாரத்தின் ஆலமரம் இந்த ஆர்எஸ்எஸ் சங்கம் என்று கூறினார்.