புதுடெல்லி: பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், "பருவநிலை மாற்றதால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வகையில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விவசாயம், எரிசக்தித் திறன், பசுமை இந்தியா உள்ளிட்ட 9 முக்கிய துறைகளில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.