திருவள்ளூர் அருகே தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இதனை தெரியப்படுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ், அமோனியா வாயு கசிவால் 74 பேர் பாதிக்கப்பட்டதாகவும், 42 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

