டெல்லி: பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதின் பேசினார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், பஹல்காமில் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என புதின் தெரிவித்தார்.
The post பஹல்காம் தாக்குதல்.. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக ரஷ்ய அதிபர் புதின் உறுதி!! appeared first on Dinakaran.