இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான போரில் ஆயுதப்படைகளை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக ராணுவ தளபதி அசிம் முனீருக்கு பதவி உயர் வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் டிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான மோதலில் முன்மாதிரியாக பங்களித்ததற்காக அசிம் முனீருக்கு நாட்டின் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பதாக பிடிவி சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
The post பாக். ராணுவ தளபதிக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.