நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு முற்றுகை போராட்டம் என்ற பெயரில் பாஜக கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது என தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசின் அமலாக்கத் துறையானது துரிதமாகச் செயல்பட்டு மேல்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அதுபோன்று ஏதும் செய்யவில்லை. மாறாக, பாஜகவினர், தமிழக அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை.