பாலக்கோடு அருகே சிறுத்தை நடமாட்டம் தொடர்வதால் ஒவ்வொரு இரவையும் திகிலுடன் கழிப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம் வாழைத்தோட்டம் அடுத்த ஜோடிசுனை பகுதியில் விநாயகம் என்ற விவசாயி வீட்டின் முற்றத்தில் இருந்த சேவலை நேற்று அதிகாலையில் சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது. அந்த விவசாயி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சி சமூக ஊடகங்கள் வழியாக பரவிய நிலையில் சுற்று வட்டார கிராம மக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது.