புதுடெல்லி: பாலியல் தூண்டுதல் இல்லாமல் உதடுகளை தொடுதல், அழுத்துதல் போக்சோ சட்டத்தில் வராது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. டெல்லியை சேர்ந்த 12 வயது சிறுமி, தனது மாமா மீது தொடர்ந்த வழக்கு தொடர்பாக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரணா காந்தா ஷர்மா வெளியிட்டுள்ள உத்தரவு: பாலியல் தூண்டுதல்கள் இல்லாத நிலையில், மைனர் பெண்ணின் உதடுகளைத் தொட்டு அழுத்துவது, அருகில் தூங்குவது ஆகியவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாது. ஆனாலும் சிறுமியின் மதிப்பை சீர்குலைக்கும் ஐபிசி 354 பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடரலாம். போக்சோவில் வழக்குப்பதிவு செய்யும் வகையில் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவோ அல்லது அத்தகைய குற்றத்தைச் செய்ய முயற்சித்ததாகவோ சொல்லவில்லை. எனவே போக்சோ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது.
The post பாலியல் தூண்டுதல் இல்லாமல் உதடுகளை தொடுதல், அழுத்துதல் போக்சோ சட்டத்தில் வராது: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து appeared first on Dinakaran.