நாளை (மார்ச்.9) சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே காலை முதல் மாலை வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நேரத்தில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. தாம்பரம் – பிராட்வே 25 பேருந்துகள், கிளாம்பாக்கம் – பிராட்வே 20 பேருந்துகள், பல்லாவரம் – செங்கல்பட்டு 5 பேருந்துகள் என 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
The post புறநகர் ரயில்கள் ரத்து; 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.