Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை

EDITOR

பெங்களூரு: 18வது ஐபிஎல் இறுதி போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், கூட்ட நெரிசலுக்கு ஆர்சிபி நிர்வாகமே காரணம் என்று கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “11 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம் தான் காரணம். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. 2009 நகர உத்தரவின் கீழ் கட்டாயமான முறையான அனுமதியைப் பெறவில்லை.ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு மூன்று லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன்றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப்பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம்”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் : கர்நாடக அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு
  • ‘மான்செஸ்டர் போட்டியில் ஆடும் லெவனில் இந்தியா ஒரு மாற்றம் செய்ய வேண்டும்’ – ரஹானே பகிர்வு
  • ஐஎன்எஸ் நிஸ்தர் மீட்பு கப்பல் கடற்படையில் இணைப்பு!
  • மயிலாடுதுறை டிஎஸ்பி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எஸ்பி, இன்ஸ்பெக்டரிடம் டிஐஜி நேரில் விசாரணை
  • தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்: அழுத்தமாக சொன்ன தமிழிசை

You Might Also Like

6 ஆண்டில் காதல் திருமணம் முடிவுக்கு வந்தது; கணவர் காஷ்யப்பை பிரிவதாக சாய்னா அறிவிப்பு: இந்திய விளையாட்டு உலகில் அதிர்ச்சி

July 14, 2025

ஏமனில் நாளை மரண தண்டனை கேரள நர்ஸ் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது: கைவிரித்தது ஒன்றிய அரசு

July 15, 2025

5 முதல் 7 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்

July 16, 2025

ஒடிசாவில் நீதிக்காகப் போராடும் ஒரு மகளின் மரணம் பாஜக அமைப்பின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி காட்டம்

July 15, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?