புதுச்சேரி: பெஞ்சல் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் தராததைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து இன்று வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைமீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ அங்காளன் பேசுகையில், “பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டதில் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் சராசரியாக தந்துள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய அளவில் நிவாரணம் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட வீடுகள், இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் தரவில்லை.”என்றார்.