சென்னை: கர்ப்பிணியான நீதிமன்ற பெண் ஊழியருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்தது சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல என தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், அவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர், பேறுகால விடுப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த முன்சீப் நீதிமன்ற நீதிபதி, அந்த பெண் ஊழியர் திருமணத்துக்கு முன்பே கர்ப்பம் தரித்துள்ளதாகக் கூறி அவருக்கு விடுப்பு வழங்க மறுத்து விட்டார். அதை எதிர்த்து அந்த பெண் ஊழியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், எனது கணவர் கடந்த 2020-ம் ஆண்டு இறந்து விட்டார்.