பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் நேற்று கண்டெடுக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், இயக்குநர் தங்கதுரை தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட அகழாய்வு முடிவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 18-ம் தேதி முதல் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது.