டெல்லி: நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து மாநில அரசு அதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை இயக்குனர், தேசிய பேரிடர் மீட்புப்படை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
The post போர்க்கால ஒத்திகை – ஒன்றிய உள்துறை செயலர் ஆலோசனை appeared first on Dinakaran.