ஆக்ரா: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த மாதம் 13ம் தேதியன்று தொடங்கிய மகாகும்பமேளா என்ற ஆன்மீக திருவிழா வரும் 26ம் தேதி(நாளை மறுதினம்) மகாசிவராத்திரி தினத்தன்று மகாகும்பமேளா நிறைவடைகிறது. இந்நிலையில், ஆக்ராவில் நேற்று நடந்த யூனிகார்ன் கம்பெனிகள் மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “ மகாகும்பமேளாவில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நிகழ்வில் இவ்வளவு மக்கள் கூடுவது என்பது நூற்றாண்டின் அரிய நிகழ்வு” என பேசினார்.
The post மகாகும்பமேளாவில் 62 கோடி பேர் புனித நீராடி உள்ளனர்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தகவல் appeared first on Dinakaran.