இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் கூட்டாக சோதனை நடத்தியதில் 300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணிப்பூரில் உள்ள இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுப்பூர், காக்சிங் மற்றும் தவுபால் ஆகிய 5 மாவட்டங்களில் ஏராளமான துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மணிப்பூர் போலீஸ், துணை ராணுவம் மற்றும் ராணுவம் நேற்று முன்தினம் இரவில் இருந்து அந்த பகுதிகளில் கூட்டாக சோதனை நடத்தினர். இதில்,300க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் மற்றும் டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post மணிப்பூரில் 300 துப்பாக்கிகள் பறிமுதல் appeared first on Dinakaran.