மும்பை : மராட்டிய மாநிலத்தில் உள்ள தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணி முதல் எரிந்து வரும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்து வருகின்றனர் தீயணைப்பு வீரர்கள். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்புத்துறை வீரர்கள் தகவல் அளித்துள்ளனர்.
The post மராட்டிய மாநிலத்தில் உள்ள தொழில் மேம்பாட்டுக் கழகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.