மும்பை: மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். துலே – சோலாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கெவ்ராய் நகரில் சொகுசு கார் ஒன்று சாலை தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது. விபத்துக்குள்ளானதை அடுத்து காரில் இருந்த 6 பேரும் கீழே இறங்கினர். சாலை தடுப்பில் ஏறி நின்ற காரை அகற்றும் பணியின்போது 6 பேர் மீதும் அவ்வழியே வேகமாக வந்த லாரி மோதியதில் 6 பேரும் உயிரிழந்தனர்.
The post மராட்டிய மாநிலம் பீட்ஸ் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.