புனே: மராட்டிய மாநிலம் புனேவில் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்ததில் 30 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். குண்டுமலை என்ற இடத்தில் உள்ள இந்திரயானி ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. 60 ஆண்டுகள் பழமையான பாலத்தை சுற்றுலா பயணிகள் நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர். வார விடுமுறை நாட்கள் என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் பாலத்தில் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.
The post மராட்டிய மாநிலம் புனேவில் ஆற்றின் நடுவே கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.