Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Reading: மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
Search
Have an existing account? Sign In
Dinakaran India

மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது

EDITOR


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் இருந்து கடத்திச் சென்று மது கொடுத்து 2 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே கடந்த 14ம் தேதி மாணவி பள்ளிக்கு வரவில்லை. தொடர்ந்து வகுப்பு ஆசிரியை மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். இதையடுத்து பெற்றோர் நடத்திய விசாரணையில் மாணவியை அந்த பகுதியை சேர்ந்த 2 பேர் வீட்டில் இருந்து கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தலப்புழா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தபோது 2 பேர் வீட்டுக்கு வந்து மாணவியை மிரட்டி குண்டுக்கட்டாக தூக்கி ஆட்டோவில் கடத்திச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் மனைவியை கடத்திச் சென்றது அருகிலுள்ள தவிஞ்ஞால் பகுதியை சேர்ந்த முகம்மது ஆஷிக் (25), ஜெயராஜன் (26) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசாரின் தீவிர விசாரணையில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். 2 பேரும் சேர்ந்து மாணவியை வீட்டிலிருந்து கடத்தி அங்குள்ள ஒரு ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கொண்டு சென்று மது கொடுத்து மயக்கி பலாத்காரம் செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பிறகு மாணவியை அவர்கள் வழியில் இறக்கி விட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம்: 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

LATEST NEWS

  • நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை; 4 பேருக்கு ஆயுள் தண்டனை
  • வளர்ச்சி அடைந்த பிஹாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
  • பாகிஸ்தானை சேர்ந்த டிஆர்எப் உலகளாவிய தீவிரவாத அமைப்பு – அமெரிக்கா அறிவிப்பு; இந்தியா வரவேற்பு
  • ஹைதராபாத் கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
  • பரஸ்பர நலன், சர்வதேச விவகாரங்களில் ரஷ்யா, இந்தியா, சீனா மீண்டும் இணைந்து செயல்பட முடிவு

You Might Also Like

பதவி நீக்க தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி வர்மா மனு

July 18, 2025

காதல் வலையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவிகளை விபசாரத்தில் தள்ளிய வாலிபர்: கேரளாவில் பரபரப்பு

July 15, 2025

வரும் 24ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு

July 18, 2025

தெலங்கானாவில் காரும் லாரியும் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!

July 18, 2025

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?