போபால்: முதியோர் இல்லத்தில் மாமியாரை சேர்க்க கணவர் மறுப்பதால், தனது மாமியாரின் தலைமுடியை பிடித்து தாக்கிய மருமகளின் செயல் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வயதான மாமியாரை சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த பெண்ணின் கணவர், தனது தாயை தாக்கும் மனைவியிடம் இருந்து அவரை காப்பாற்ற முயற்சிக்கிறார். இருந்தாலும் அந்தப் பெண், தனது மாமியாரின் தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்துச் செல்கிறார்.
இதுகுறித்து வீடியோ வைரலானதால் மத்திய பிரதேச போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து ேபாலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘குவாலியரில் கார் உதிரி பாகங்கள் கடை நடத்தும் விஷால் பத்ரா, தனது 70 வயது தாய் சாரா பத்ரா மற்றும் மனைவி நீலிகா ஆகியோருடன் வசித்து வந்தார். விஷால் பந்ராவின் மனைவி, தனது மாமியாரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும்படி வற்புறுத்தி உள்ளார். அதற்கு விஷால் பத்ரா மறுத்துவிட்டார். பின்னர் அவரது மாமனார் வீட்டிற்குள் நுழைந்து திடீரென அவரை கன்னத்தில் அறைந்தார். அவரும் அவரை அறைய முயன்றார், ஆனால் வேறு சிலர் உள்ளே நுழைந்து அவரை அடிக்கத் தொடங்கினர்.
முதல் மாடியில் இருந்த நீலிகா கீழே வந்து தனது மாமியாரை இழுத்துச் சென்றார். அவர் தனது மகனை காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார். மற்றொரு வீடியோவில் விஷால் பத்ரா சாலையில் வைத்து தாக்கப்படுகிறார். சாரா பத்ராவின் கண் வீங்கிவிட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நீலிகா, அவரது தந்தை ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.
The post மாமியாரின் தலைமுடியை பிடித்து தாக்கிய மருமகள்: மத்திய பிரதேசத்தில் கொடூரம் appeared first on Dinakaran.