சத்தீஸ்கரில் சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு உணவு, தங்குமிடம், திறன் மேம்பாட்டு பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில உள் துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதை ஒழிக்கும் பணியில் மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்புப் படையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை 2 வெவ்வேறு இடங்களில் நடந்த என்கவுன்ட்டரில் 30 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு வீரரும் வீர மரணம் அடைந்தார்.