டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி உறுதிசெய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து வருகிறார். அதிமுக கொள்கை வேறு, கூட்டணி வேறு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார். இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் தன்னை நம்பியவர்கள் யாரையும் கைவிட்டதில்லை என்று எடப்பாடி பேசியிருந்தார். பாஜகவுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை என்று கூறி வந்த எடப்பாடி பழனிசாமி நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி டெல்லி புறப்பட்டனர். ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ள நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர். ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக தலைவர்கள் டெல்லி சென்றுள்ளதால் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் டெல்லி சென்ற எடப்பாடி டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அப்போது டெல்லியில் முக்கியமானவர்களை பார்க்க வரவில்லை; அதிமுக அலுவலகத்தை பார்க்க வந்துள்ளேன் என எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் இன்று மாலை பாஜக தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைய உள்ளதாக பேசப்படும் நிலையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.
The post மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா?.. அதிமுக தலைவர்கள் டெல்லியில் முகாம்: தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.