டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசை கவிழ்ப்பதற்கு சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் 72 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் 16 ஆண்டு கால அவாமி லீக் ஆட்சியானது கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி கவிழ்ந்தது. தொடர் மாணவர்கள் போராட்டம் காரணமாக பதவியை ராஜினாமா செய்த பிரதமர் இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இடைக்கால அரசை கவிழ்ப்பதற்கு ஷேக் ஹசினா சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் 72 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குற்றப் புலனாய்வு துறையானது டாக்காவின் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
The post முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீது வழக்கு appeared first on Dinakaran.