மும்பை: மும்பை பல்லார்ட் பையர் எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 12 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் அடைந்து வருகின்றனர். அமலாக்கத்துறை அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதமடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்துக்கான காரணம் என்னவென்று இன்னும் தெளிவான தகவல் இல்லை என மும்பை தீயணைப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
The post மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தீ விபத்து: முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி சேதம் appeared first on Dinakaran.