மும்பை: வர்த்தக தொடக்கத்தில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.8 வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிந்து 79,213 புள்ளிகளானது. நண்பகலில் 1195 புள்ளிகள் வீழ்ச்சியுள்ள சென்செக்ஸ் இறுதியில் மீட்சி பெற்று 589 புள்ளிகளில் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 24 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின.
The post மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 589 புள்ளிகள் சரிவு!!.. appeared first on Dinakaran.