புதுடெல்லி: மேற்குவங்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடு காரணமாக 24 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனத்தை கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அண்மையில் உறுதி செய்தது. ஆனால் பணி காலத்தில் பெறப்பட்ட ஊதியத்தை அரசுக்கு திரும்பி செலுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு நிவாரணம் அளித்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு புதிய நிவாரணம் ஒன்றை வழங்கி உள்ளது.
அதில், “ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான விவகாரத்தில் மாணவர்கள் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை பழைய ஆசிரியர்கள் தங்கள் பணியை தொடரலாம். மேலும் டிசம்பர் 31ம் தேதிக்குள் புதிய ஆசிரியர் நியமனத்தை மேற்கு வங்க அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து முடிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.
The post மேற்கு வங்கத்தில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரை 24,000 ஆசிரியர்கள் பணி தொடர அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.