புதுடெல்லி: மொரிசியசில் உள்ள அதானியின் போலி நிறுவனங்கள் குறித்த தகவல்களை பிரதமர் மோடி கேட்டுப் பெறாதது ஏன் என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில், ‘‘இந்தியாவின் நீண்டகால நட்பு நாடு மொரிசியஸ். ஆனாலும், மொரிசியசில் உள்ள ஷெல் நிறுவனங்கள் மூலம் அதானி மிகப்பெரிய அளவில் பணமோசடி, வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக நம்பகமான குற்றச்சாட்டுக்களால இருதரப்பு உறவு கறைபட்டுள்ளது.
இந்த மெகா மோசடி குறித்து சம்மந்தப்பட்ட வெளிநாடுகளில் இருந்து ஒன்றிய பாஜ அரசு இதுவரை எந்த தகவலையும் கேட்டு பெறாததால், 2 மாதத்தில் முடிய வேண்டிய செபி விசாரணை 2 ஆண்டாக நடந்து வருகிறது. தனது நெருங்கிய நண்பரின் நிதி மோசடியை தண்டிக்க தேவையான தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு மொரிசியசை கேட்டுக் கொள்வதற்கு பதிலாக நண்பர்களை தொடர்ந்து பிரதமர் மோடி பாதுகாக்கிறாரோ? தேர்தல் மோசடிக்கும் இந்த மெகா நிதி மோசடிக்குமான தொடர்பை நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை மூலம் மட்டுமே வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும்’’ என்றார்.
The post மொரிசியசில் உள்ள அதானி போலி நிறுவன தகவல்கள் பெறாதது ஏன்? மோடியிடம் காங். கேள்வி appeared first on Dinakaran.