மதுரை: “மொழியைத் திணிக்க மத்திய அரசுக்கு அதிகாரமோ, உரிமையோ கிடையாது” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (மார்ச் 12) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மதுரைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பொது மக்களிடமிருந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 656 மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். பின்னர் தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பரிந்துரை செய்தார்.