திருப்பூர்: “மோடி தேசபக்தி உள்ளவராக இருந்தால் மன்மோகன் சிங் சொன்னது போல தனித்தனி பொருட்களுக்கு வரி என மாற்றி புதுக் கொள்கையை வரையறுக்க வேண்டும். இதுபோன்ற மாற்றுத் திட்டங்களை கொண்டு வரும் வரை மோடியை வரலாறு மன்னிக்காது” என்று ஆ.ராசா எம்.பி கூறியுள்ளார்.
அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் கடும் பாதிப்புள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் கைவிட்ட மத்திய பாஜக அரசை கண்டித்தும், தொழில் துறையினருக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் பெரியார் அண்ணா சிலைகள் முன்பு இன்று (செப்.2) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் வரவேற்றார்.