டெல்லி: டெல்லி ரயில்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முன்பதிவில்லா டிக்கெட் விற்கப்பட்டது ஏன்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நடைமேடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிகழ்வு நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசத்தில் கும்பமேளாவுக்கு செல்ல பல்லாயிரக்கணக்கானோர் செல்வார்கள் என தெரிந்தும் போதுமான ரயில்களை இயக்காதது, ரயில் நடைமேடை திடீரென மாற்றப்படுவது போன்ற ரயில்வே துறையின் குளறுபடிகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் கூட்ட நெரிசலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையில்; டெல்லி ரயில்நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக, ரயில்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முன்பதிவில்லா டிக்கெட் விற்கப்பட்டது ஏன்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை மார்ச் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
The post ரயில்நிலையத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக முன்பதிவில்லா டிக்கெட் விற்கப்பட்டது ஏன்?: டெல்லி ஐகோர்ட் கேள்வி! appeared first on Dinakaran.