புதுடெல்லி: 2004ம் ஆண்டு பிரிவை சேர்ந்தவர் இந்திய வருவாய் சேவை அதிகாரியான ஜீவன் லால் லாவிடியா. இவர் தற்போது ஐதராபாத் வருமான வரி (விலக்குகள்) ஆணையராக பொறுப்பு வகித்து வருகிறார். சில பணிகளை முடித்து தர லாவிடியா லஞ்சம் வாங்கியதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது. அடினடிப்படையில் லாவிடியா மீது அண்மையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஜீவன் லால் லாவிடியா உள்பட 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
The post ரூ.70 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஐதராபாத் வருமான வரி ஆணையர் கைது appeared first on Dinakaran.