டெல்லி: வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை உச்சநீதிமன்றம் மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது. வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்குகள் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. வக்ஃபு சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வாதங்களை நிராகரித்து வக்ஃபு சட்டத்துக்கு தடை விதிக்க பதில் மனுவில் திமுக கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஒன்றிய அரசின் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது என திமுக தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
The post வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்குகள்: மே 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.