வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்க நாளில் ஏழை, நடுத்தர வர்க்க மக்களை லட்சுமி தேவி ஆசீர்வதிக்க வேண்டும் என்று மனதார பிரார்த்திக்கிறேன். மூன்றாவது முறையாக நாட்டுக்கு சேவையாற்ற மக்கள் எனக்கு வாய்ப்பு அளித்து உள்ளனர். 3-வது முறை ஆட்சிப் பொறுப்பேற்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளோம். இந்த பட்ஜெட் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கும்.