கொரடாச்சேரி அருகே குப்பை அடைத்திருந்த வாய்க்காலை சுத்தம் செய்த தன்னார்வலர்களின் செயலுக்கு விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டு கடைமடையை தண்ணீர் சென்றடைந்தாலும், பல இடங்களில் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் சென்றடைய வில்லை. இதனால், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வாய்க்கால்களில் ஆங்காங்கே குப்பை அடைத்து நீரோட்டத்தை தடை செய்து வருகிறது. இந்நிலையில், கொராச்சேரி அருகே ஊர்குடி வாய்க்காலில் குப்பை அடைத்து, நீரோட்டம் தடைபடுவதை கண்ட திருவாரூர் தன்னார்வலர்கள் அமைப்பினர், வாய்க்காலில் இறங்கி குப்பையை அகற்றி நீரோட்டத்தை சரி செய்தனர்.