சென்னை: வால்வோ கார் இந்தியா நிறுவனம் இ.எக்ஸ்.30 மாடல் மின்சார காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜோதி மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: பண்டிகை காலத்தை முன்னிட்டு வால்வோவின் புதிய தயாரிப்பான இ.எக்ஸ்.30 மாடல் மின்சார கார் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இதன் விலை ரூ.41 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அக்டோபர் 19-க்கு முன் முன்பதிவு செய்தவர்களுக்கு ரூ.39,99,000 என்ற சலுகை விலையில் இந்த கார் வழங்கப்படும். நவம்பர் முதல் வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும்.