அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினால் திமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும், அதேபோல், திமுக ஆட்சி நடந்தால் அதிமுக தலைவர்கள் ஆதரவளித்து வீராவேசமாக பேசுவதும் கடந்த கால வரலாறு. இப்போது கூடுதலாக தவெக-வும் களத்துக்கு வந்து போராட்டக் களத்தில் இருப்பவர்களுக்காக வசனம் பேச ஆரம்பித்திருக்கிறது.
பள்ளிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரைக்கும் திறமையான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதற்காக கடந்த 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வை (டெட்) கொண்டு வந்தது மத்திய அரசு. இந்நிலையில், 2018-ம் ஆண்டு அதிமுக அரசு, டெட் தேர்வு மட்டும் போதாது, மறு நியமன போட்டித் தேர்வும் எழுத வேண்டும் என அரசாணை 149-ஐ பிறப்பித்தது.