சென்னை: இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதள பதிவுகளில் நாம் பார்க்கின்ற பதிவுகளில் சில போலியாக உருவாக்கப்பட்டவை. ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பத்தின் வரவினால் ‘கண்ணால் காண்பது பொய். தீர விசாரிப்பதே மெய்’ என்பதற்கு உதாரணமாக பல்வேறு பதிவுகள் உள்ளன. அதில் ஒன்றாக உள்ளது இந்த கங்காரு வீடியோ பதிவு.
அந்த வீடியோவை ஷீத்தல் யாதவ் என்பவர் பகிர்ந்துள்ளார். அதில் கங்காரு ஒன்று கையில் போர்டிங் பாஸ் உடன் விமானத்தில் பயணிக்க தயாராக நிற்கிறது. இருப்பினும் விமான நிறுவன பணியாளர் அதை பயணிக்க அனுமதிக்கவில்லை என்றும். அதுகுறித்து பெண்கள் இருவர் விவாதிக்கின்றனர் என்றும் அதில் கேப்ஷனாக தெரிவிக்கப்பட்டது.