டெல்லி: வீர தீர சூரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை மேலும் 4 -வாரங்களுக்கு நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர தீர சூரன் பட வழக்கு தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 24 மணி நேரத்தில் ரூ.7 கோடி டெபாசிட் செய்ய ஐவிஒய் என்டர்டையின்மன்ட் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஐவிஓய் என்டர்டையின்மன்ட் நிறுவனம், எச்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து பேசி சுமூகத் தீர்வு காண திட்டமிட்டுள்ளது. விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஓடிடி உரிமம் விற்கப்படும் முன்பு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்ததை எதிர்த்து B4U நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. திட்டமிட்டபடி வீர தீர சூரன் படம் இன்று வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post வீர தீர சூரன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை மேலும் 4 -வாரங்களுக்கு நீட்டிப்பு டெல்லி உயர்நீதிமன்றம் appeared first on Dinakaran.