புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் ஷாஜஹான்பூரில் ‘லாட் சாஹேப்’ எனும் பெயரில் ஹோலி பண்டிகை வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகிறது. இதில் வழக்கம்போல் முன்னெச்சரிக்கையாக அனைத்து மசூதிகளும் தார்பாய்களால் மூடப்பட்டுள்ளன.
உ.பி உள்ளிட்ட வட இந்தியா முழுவதிலும் நாளை மார்ச் 14 ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. உ.பி.யின் ஷாஜஹான்பூரில் கொண்டாடப்படும் ஹோலிக்கு ஒரு தனிப் பாரம்பரியம் உள்ளது. அங்கு ஒவ்வொரு ஹோலிக்கும் ’லாட் சாஹேப்’ எனும் பெயரில் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இரண்டு வகையான ஊர்வலங்கள் நடைபெறுகின்றன.