புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளிலும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முன்னோடித் திட்டத்தை புதுச்சேரி மாநில அரசு அறிவித்துள்ளது. அதற்கான அரசாணை பிறப்பிக்க தேவையான பணிகளையும் அம்மாநில அரசு துரிதமாக செய்து வருவது பாராட்டுக்குரியது.
இளநிலை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கெனவே 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து படிப்புகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுவது மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது. அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் உயர்கல்விச் செலவையும் அம்மாநில அரசே ஏற்றுக் கொண்டு வருகிறது.