புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,395 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000 ஆக பதிவாகியது. அதன் பிறகு 2 வருடங்களில் முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளது. நாட்டில் தற்போது 3,395 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அதிகபட்சமாக கேரளாவில் 1,336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
The post 2 ஆண்டில் முதன்முறையாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3000ஐ கடந்தது appeared first on Dinakaran.