சென்னை: தமிழகத்தில் கடந்த 2023-24-ம் ஆண்டில் காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகா வாட்டாகவும், சூரியசக்தி மின்நிறுவு திறன் 1,261 மெகாவாட்டாகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையம் அமைப்பதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, சூரியசக்தி மின்னுற்பத்திக்கு சூரியனின் வெப்பத்தை விட வெளிச்சம் அவசியம்.தென்மாவட்டங்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருப்பதால், மின்நிலையம் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது.