லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தெஹலி கிராமத்தில் 24 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1981ல் தெஹலி கிராமத்தில் புகுந்த 17 பேர் கொண்ட கொள்ளை கும்பல் பட்டியலின மக்கள் 24 பேரை கொன்றது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்த காலத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 44 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கப்டன் சிங் (60), ராம்பால் (60), ராம் சேவக் (70) ஆகியோருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
The post 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேருக்கு தூக்கு appeared first on Dinakaran.