ராஞ்சி: ஜார்க்கண்டில் 27 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர், மகா கும்பமேளா பகுதியில் அகோரியாக வாழ் வதை அவ ரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் உள்ள புலி பகுதியில் வசித்தவர் கங்காசாகர் யாதவ் (65). கடந்த 27 ஆண்டுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் கங்காசாகரை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அவர் தற்போது அகோரி சாதுவாக சாத்வியுடன் வாழ்ந்து வருகிறார்.