சென்னை: குழந்தைகளுக்கு விருப்பமான மூன்றாம் மொழி குறித்த தரவுகளைப் பெறும் கையெழுத்து இயக்கம் மார்ச் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில், இந்தி உள்ளிட்ட ஏதேனும் ஒரு விருப்பமொழியைப் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.