ஹைதராபாத் : 3-வது குழந்தை பெறும் பெண்களுக்கு எனது சம்பளத்தில் இருந்து ரூ.50,000 ஊக்கத்தொகை தரப்படும் என்று TDP எம்.பி. தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி எம்.பி. காளிசெட்டி அப்பலா நாயுடுவின் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களின் மக்கள் தொகை குறைந்து வருவதாக அண்மையில் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். இனி எத்தனை குழந்தைகள் பெற்றாலும் மகப்பேறு விடுப்பு என்றும் சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.
The post 3-வது குழந்தை பெறுவோருக்கு ரூ.50000 : தெலுங்கு தேசம் appeared first on Dinakaran.